புலிகளுக்கு அரசியலில் இடமா? நோ என்கிறார் இலங்கை பிரதமர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப்புலிகள் தீவிரவாதத்தைக் கைவிடும்வரை அவர்களை அரசியலில் சேர்க்க மாட்டோம் என்று இலங்கைப் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமசிங்கேவியாழக்கிழமை தெரிவித்தார்.
இலங்கையில் அக்டோபர் 10 ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. தன் கட்சியான மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பிரதமர்விக்ரமசிங்கே பேசியதாவது:
மக்கள் கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்தால், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்படும். விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒழிப்பதேஎங்கள் நோக்கம். அதன் பின்பு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மை இன மக்களுக்கு உதவி செய்வோம்.
விடுதலைப்புலிகள் போரைக் கைவிட்டுவிட்டு அமைதிப் பாதைக்குத் திரும்பி வரும் வரை அவர்களுக்கு அரசியலில் இடம் என்ற பேச்சுக்கே இடமில்லைஎன்றார் விக்ரமசிங்கே.












Click it and Unblock the Notifications