தனியார் வங்கி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர்கள்
கோவை:
தனியார் வங்கியில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த தொழிலதிபர்களின் ஜமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் கிருஷ்ணா பாங்க் செயல்பட்டு வந்தது. வங்கியின் தலைவராக மேனன் செயல்பட்டு வந்தார். இந்த வங்கியில்,"சைன் பிளாஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தினர் கணக்கு வைத்திருந்தனர்.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களாக குருவாயூரைச் சேர்ந்த அபுபக்கர், கோவை கே.கே புதூரைச் சேர்ந்த பாத்திமா முன்னி,கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள சவாக்காடு என்ற இடத்தைச் சேர்ந்த அப்துல் கபூர் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
இவர்கள் போலி ஆவணங்களைத் தயார் செய்து வங்கியில் கொடுத்து இரண்டரை கோடி ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர். இது குறித்து தெரிய வந்த வங்கியின்மேலாளர், கோவை பொருளாதாரக் குற்றப் புலனாய்வுப் போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு நிலையில் பங்குதாரர்கள் வரும் கோவை தன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுக் கேட்டு மனுத் தாக்கல்செய்திருந்தனர்.
இந்த விசாரணையில், மூன்று பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம்உத்தரவிட்டார்.