பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்றங்கள்: விசாரிக்க தனி குழு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
அரசு அலுவகங்கள், தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்றங்களை விசாரிப்பதற்கென்றே பாண்டிச்சேரியில் தனிக் குழுஅமைக்கப்படவுள்ளது.
அரசு அலுவலகங்கள், தனியார் துறைகள் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்றங்கள் பெருகி விட்டன. காவல்நிலையங்களிலும் கூட செக்ஸ் புகார்கள் அதிகரித்து விட்டன.
இவற்றை கருத்தில் கொண்டு அரசு அலுவலகங்களிலோ அல்லது மற்ற இடங்களிலோ செக்ஸ் துன்புறுத்தல்கள் நடந்தால், அதுபற்றிய புகார்களைதெரிவிப்பதற்கு வசதியாகவும், அவை தொடர்பாக விசாரித்து தக்கநநிடவடிக்கைகள் எடுப்பதற்காகவும் தனிக் குழு ஒன்றை பாண்டிச்சேரி அரசுஅமைத்துள்ளது.
அரசின் இந்த புதிய முயற்சியை அம்மாநில பெண் அரசு அலுவலர்கள் வரவேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications