நீதிமன்ற வாசலில் வாலிபர் படுகொலை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

திருநெல்வேலியில், நீதிமன்ற வாசலில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

நெல்லை தச்சநல்லூர் பகுதியிலுள்ள வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். வயது 25. இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மேல்இரண்டு கொலை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக முத்துக்குமார், பாளையங்கோட்டை நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வந்தார். அவருடன் மேலும் 4 பேரும் வந்தனர். 5பேரும் நீதிமன்றம் எதிரில் டீ குடித்து விட்டு நீதிமன்றம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, முத்துக்குமாருடன் வந்த 4 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளால், முத்துக்குமாரை சரமாரியாக வெட்டினர். அவர் உயிர் தப்பமுயன்றும், ஓட ஓட விரட்டிக் கொலை செய்தனர். இதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பிணமானார்.

நீதிமன்றத்திற்கு முன்பு நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.முத்துக்குமாரைக் கொன்று விட்டுத் தப்பியவர்களை பிடிக்க போலீஸார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+