முன்னாள் டி.ஜி.பி. மோகன்தாஸ் மரணம்
சென்னை:
தமிழக முன்னாள் டி.ஜி.பி. மோகன்தாஸ் சென்னையில் வெள்ளிக் கிழமை மாலைகாலமானார். அவருக்கு வயது 68.
எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழக போலீஸ்டி.ஜி.பி.யாக இருந்தவர் மோகன்தாஸ். விடுதலைப்புலிகளுக்கு எதிராக அதிரடிநடவடிக்கை எடுக்கச் செய்து, ஒரே நாளில் அவர்களின் ஆயுதங்ளை பறிமுதல்செய்தவர் என்ற பெயர் பெற்றவர்.
கேரளாவைச் சேர்ந்த இவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர். எம்.ஜி.ஆரை"சேட்டன் என்று அழைக்கக் கூடிய அளவுக்கு இருவருக்கும் நெருக்கம் அதிகம்.
1956-ம் வருடம் காவல் துறையில் சேர்ந்த மோகன்தாஸ் 1990ம் ஆண்டு ஓய்வுபெற்றார். இவருக்கு மனைவி, நான்கு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் பிருந்தா டி.வி.தொடர்களில் நடித்து வருகிறார்.
எம்.ஜி.ஆருடன் உள்ள நெருக்கம் காரணமாக அவரது மறைவுக்கு பின்னர் அவரைப்பற்றிய ஆங்கிலப் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார் மோகன்தாஸ்.












Click it and Unblock the Notifications