காட்டில் மழை .. காத்திருக்கிறார் கோபால்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் கடும் மழை பெய்வதால் அரசுத் தூதர் கோபால் காட்டுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்வெள்ளிக்கிழமை காட்டுக்குள் சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்க அரசுத்தூதர் கோபால் மூன்று முறை காட்டுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினார். தற்போது4 வது முறையாக புதன்கிழமை இரவு சென்னையிலிருந்து காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

காட்டுக்குச் சென்ற அவர், வீரப்பனிடம் இருந்து தகவலை எதிர்பார்த்து சத்யமங்கலம் பகுதியில் தங்கி இருக்கிறார். அங்கு பலத்த மழை பெய்வதால்கோபால் காட்டுக்குள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நள்ளிரவு வரை வீரப்பனிடமிருந்து, கோபாலுக்குத் தகவல் எதுவும் கிடைக்கவில்லையென்றும், அவர் சத்தியமங்கலம் பகுதியிலேயேதங்கியிருப்பதாகவும் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் தெரிவித்தார்.

வீரப்பனிடமிருந்து, கோபாலுக்கு வெள்ளிக்கிழமைக்குள் தகவல் கிடைக்குமென்றும், அதன்பிறகு கோபால் காட்டுக்குள் செல்வார் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+