என்ன சாதித்தது இந்தியா?
Subscribe to Oneindia Tamil
சிட்னியில் 22-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 24 விளையாட்டுக்களில் 4-ல் மட்டுமேஇந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...
- அதலெடிக்ஸ் : பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் பீனா மோல் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றார். மற்றபடி ஆண்களுக்கான குண்டுஎறிதல் மற்றும் ஈட்டி எறிதல், ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள்தோல்வியடைந்தனர்.
- டென்னிஸ் : ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி ஆஸ்திரேலியாவின் டாட்உட்பிரிட்ஜ்-உட்போர்டே ஜோடியிடம் 3-6, 6-7 (1-7) என்ற கணக்கில் தோற்று வெளியேறியது.
பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் நிருபமா வைத்தியநாதன்-மனிஷா மல்ஹோத்ரா ஜோடி ஆஸ்திரேலியாவின்ஜெலீனா டோகிக்-ரென்னே ஸ்டப்ஸ் ஜோடியிடம் 0-6, 0-6 என்ற செட் கணக்கில் படுதோல்வியடைந்தது.
- குத்துச்சண்டை : ஆண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் இரண்டாவது ரவுன்டில் ஜிதேந்தர் குமார் 3-12 என்ற புள்ளிகள் கணக்கில் ருமேனியாவின்அட்ரியன் டயகோனுவிடம் தோற்றார்.
- குதிரையேற்றம் : 3 நாட்கள் நடைபெற்ற இப் போட்டியில் இம்தியாஸ் அனீஸ் 236.60 பெனால்ட் புள்ளிகள் எடுத்து கடைசி இடம் பிடித்தார்.












Click it and Unblock the Notifications