For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை போலீஸ்காரர் கொலையில் குற்றப்பத்திரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை போலீஸ்காரர் செல்வராஜ் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகல்கள்வழங்கப்பட்டது. இதே போல எம்.எல்.ஏ., கார் எரிப்பு வழக்கிலும் குற்றப் பத்திரிக்கை பதிவுநடந்தது.

கோவையில் போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ் கடந்த 97ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அல் உம்மா பொதுச் செயலர் அன்சாரி, சித்திக் அலி ஆகியோருக்குவெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணைஅக்டோபர் 12ம் தேதிக்கு நீதிபதி பூபாலன் ஒத்தி வைத்தார்.

செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் கோவை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏதண்டபாணியின் கார் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு கலவரம் நடந்தது. இந்த வழக்கில்வெள்ளிக்கிழமை குற்றப் பதிவு நடந்தது.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், அதிரடி ஆனந்தன் உட்பட 10 பேர் ஆஜர்செய்யப்பட்டனர்.

நீதிபதி விஸ்வநாதன் இந்த வழக்கை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X