எம்.பி.பி.எஸ்.சீட்டுக்களை அதிகரிக்க தமிழக அரசு முடிவு
சென்னை:
சேலம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் எம்.பி.பி.எஸ் சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநர் ஜெயச்சந்திரன் கடந்த வாரம் சேலம் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை ஆராய்ந்தார்.
அப்போது, அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது சேலம் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பட்டமேற்படிப்பு வகுப்புக்களைத் துவக்கவேண்டும் என்று மாணவர்கள் கேட்டுக் கொண்டனர்.
மேலும், புதிதாக துவக்கப்பட்ட திருச்சி, தூத்துக்குடி மருத்துவக்கல்லூரிகளில் 100 சீட்டுக்களை அதிகரித்தது போல் சேலத்திலும் சீட்டுக்களை அதிகரிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் எம்.டி மற்றும் எம்.எஸ்.ஆகிய பட்ட மேற்படிப்புக்களை துவக்க தமிழக அரசுஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் சேலத்தில் தற்போதுள்ள 75 சீட்டுக்களை 100 ஆகவும், செங்கல்பட்டில் உள்ள 50 சீட்டுக்களை 100 ஆக உயர்த்தவும் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதிக்குப்பின் இவை அமலுக்கு வரும்.












Click it and Unblock the Notifications