ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி மைசூரில் பந்த்
மைசூர்:
நடிகர் ராஜ்குமாரை விரைவில் விடுவிக்கக் கோரி மைசூரில் வெள்ளிக்கிழமை பந்த் அமைதியாக நடந்தது.
ராஜ்குமார் ரசிகர்கள் சங்கம் மற்றும் கன்னட சங்கங்கள் இந்த பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்கவில்லை. பஸ் போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. பஸ்கள், ஆட்டோக்கள்,டாக்சிகள் எதுவும் ஓடவில்லை.
மைசூர் உள்பட முக்கியப் பகுதிகளான இட்டிகே கூடு, நசீராபாதா பகுதிகள் போக்குவரத்து இல்லாமல் பாலைவனம் போல் காட்சியளித்தன. முழுஅடைப்பை ஒட்டி, மைசூரில் மேயர் நாராயணா, பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.சங்கரலிங்கே கவுடா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.
அக்கூட்டத்தில், நடிகர் ராஜ்குமார் விடுதலையில் தாமதமாவதால் தசரா விழாவை மிகவும் எளிதாகக் கொண்டாடுவது எனமுடிவெடுக்கப்பட்டது.மேலும், பந்த்தையொட்டி ராஜ்குமார் ரசிகர்கள் சார்பில் அமைதி பேரணியும் நடத்தப்பட்டது. மைசூரில் முழு அடைப்பையொட்டிஎந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை.