For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்.எல்.ஏ.க்களை இழுக்கிறது பாண்டி த.மா.கா.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் - த.மா.கா. கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அதிரடி முயற்சிகளை கட்சித் தலைவர் மூப்பனார் மேற்கொண்டுள்ளார்.

முதல் கட்டமாக, இதுவரை ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் இருந்து வரும் எம்.எல்.ஏ. ஒருவர் அணி மாறுகிறார். தி.மு.க. அணியில் இருந்த அவர்அங்கிருந்து வெளியேறி காங்கிரஸ் - த.மா.கா .கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க முன் வந்துள்ளார். அதோடு, விரைவில் அவர் த.மா.கா.விலும்இணைகிறார்.

த.மா.கா.வில் இருந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியதால் ஏற்பட்ட எண்ணிக்கை பலத்தை சரிக்கட்ட மற்ற கட்சிகளில் இருந்துஎம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் த.மாகா. ஈடுபட்டுள்ளது.

பாண்டிச்சேரி சட்டசபையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி சார்பில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தார். தி.மு.க. அணியில் இடம் பெற்றிருந்த அவரை தங்கள் பக்கம்இழுந்துள்ளது த.மா.கா.

"இழுக்கப்பட்ட எம்.எல்.ஏ. ராஜாராம் சென்னை வந்து த.மா.கா. தலைவர் மூப்பனாரை சந்தித்து ஆசி பெற்று, காங்கிரஸ் - த.மா.கா.கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் பாண்டிச்சேரி காங்கிரஸ் - த.மா.கா. கூட்டணியின் பலம் 17 ஆக உயர்ந்துள்ளது. சண்முகம் ஆட்சிக்குஏற்பட்ட ஆபத்து நீங்கியது.

எம்.எல்.ஏ. ராஜாராம் தனது தொகுதி மக்களிடம், கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் த.மா.கா.வில் இணைவதாகவும்மூப்பனாரிடம் உறுதியளித்துள்ளார்.

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் - த.மா.கா. கூட்டணி ஆட்சி ஏற்பட்டதில் இருந்து அம்மாநில த.மா.கா. தலைவரும், அமைச்சருமான கண்ணன் அதிருப்தியில்இருந்தார்.

இப்போது கண்ணன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனோகர், ராஜசேகர் உடையார், ஏழுமலை ஆகியோர் த.மா.கா.வில் இருந்து விலகியுள்ளனர்.

இதனால் பாண்டிச்சேரி த.மா.கா.வில் பலம் குறைந்தது.

தேனீ ஜெயக்குமார், கந்தசாமி, பாலாஜி ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்கள் தான் த.மா.கா.வில் உள்ளனர் என்பதும், த.ம.ாகா.வை விட்டு விலகியகண்ணன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் ஆட்சிக்கு ஆதரவை தொடர்வதாக அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X