For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனுக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமாரை உடனே விடுவிக்குமாறு சந்தனக் கடத்தல் வீரப்பனுக்குமக்கள் சிவில் உரிமைக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பன், ஜூலை மாதம் 30-ம் தேதி பிரபல கன்னட நடிகர்ராஜ்குமாரை கடத்திச் சென்றான். அவருடன் மேலும் மூவரும் கடத்தப்பட்டனர்.அவர்கள் அனைவரையும் உடனே விடுவிக்குமாறு மக்கள் சிவில் உரிமைக் கழகம்கேட்டுக் கொண்டுள்ளது.

அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷும், தேசிய தலைவர் கண்ணபிரஈனும்விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழக கர்நாடக எல்லையில் வசித்து வரும் கன்னடமற்றும் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காகவும்,அவர்களிடையே நட்புறவுநிலவுவதற்காகவும், அங்கு அமைதி நிலவுவதற்காகவும் ராஜ்குமாரையும்,மற்றவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.

மனித உரிமைக் கழகத்தைச் சேர்நதவர்கள் என்ற முறையில் தமிழக, கர்நாடக அரசுகள்எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது குறித்து நாங்கள் வருந்துகிறோம்.

தமிழக, கர்நாடக அரசுகளை உயர் நிலைக் குழு ஒன்றை அமைத்து வீரப்பன்இழைத்துள்ள குற்ற்ங்கள் குறித்து பரிசீலித்து அதில் மன்னிக்க முடியாத குற்றங்களுக்குமட்டும் வீரப்பனுக்கு தண்டனை வழங்க வேண்டும்.என்று கூறியுள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X