"இலங்கையில் தமிழ் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கையில் தமிழ் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று ராமேஸ்வரத்துக்கு அகதியாக வந்த கல்லூரி மாணவி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதனால் அங்குள்ள அப்பாவித் தமிழர்கள்,தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். கடந்த சில நாட்களாக அகதிகளின் வருகை குறைந்துள்ளது.

இதற்கிடையே வியாழக்கிழமை அதிகாலை ராமேஸ்வரம் பகுதியிலுள்ள தனுஷ்கோடி கடற்கரைக்கு 4 பெண்கள் உள்பட 7 அகதிகள் படகில்வந்திறங்கினர். அவர்கள் அனைவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள்.

தலைமன்னாரிலிருந்து அவர்கள் படகில் வந்ததாகத் தெரிவித்தனர். அவர்களில் கல்லூரி மாணவி பிரியதர்ஷினி என்பவரும் ஒருவர். அவர் நிருபர்களிடம்கூறுகையில், நான் கிளிநொச்சியில் வசித்து வருகிறேன். எனது தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டார். நான் மல்லாவி பகுதியிலுள்ள மகளிர் கல்லூரியில் படித்துவந்தேன்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து சண்டை நடந்து வருவதால், ராணுவ வீரர்கள் விமானத்திலிருந்து தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு வீசித் தாக்குதல் நடத்திவருகிறார்கள். வீடுகளைத் தரைமட்டம் ஆக்குகிறார்கள்.

பெண் விடுதலைப்புலிகள் என்று கருதி, தமிழ் பெண்களை பிடித்துச் செல்கிறார்கள். தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால்தான் என்னை தமிழகத்துக்குச்சென்று விடும்படி என் தாய் என்னை, உறவினர்களுடன் அனுப்பி வைத்தார் என்றார் பிரியதர்ஷினி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+