நீலகிரி ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்ப்பு
கோவை:
சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் சேர்க்கப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் ராஜகோபால் கோயம்புத்தூரில்வியாழக்கிழமை தெரிவித்தார்.
கேரளா செல்லும் வழியில் கோவை வந்த அவர் விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஒவ்வொரு மாநிலத்திலும் சுற்றுலாத்தலங்கள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை ரயில்வே திட்டங்களுக்கு பயன்படுத்தபரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஒருவழி ரயில் பாதையாக உள்ள இருகூர்-கோவை மற்றும் போத்தனூர்-கோவை ரயில்பாதைகளை ஒரு கோடி ரூபாய் செலவில் இரட்டை வழித்தட ரயில்பாதையாக மாற்றப்படும்.
சேரன், நீலகிரி, எக்ஸ்பிரஸ் ரயில்களில் தற்போது 19 பெட்டிகள் மட்டுமே உள்ளன. இதனால் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது. எனவேபயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, முதல்கட்டமாக கூடுதலாக இரண்டு பெட்டிகளும், இரண்டாம் கட்டமாக 3 பெட்டிகளும் இயக்கப்படும்.
மேலும், சென்னை, டில்லி ஆகிய நகரங்களில் இன்டர்நெட் மூலம் ரயில்வே முன்பதிவு வசதி திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்ராஜகோபால்.












Click it and Unblock the Notifications