For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு நீர் மூழ்கிக் கப்பல்களை இயக்குவதை நிறுத்த ரஷியா முடிவு

By Staff
Google Oneindia Tamil News

மாஸ்கோ:

அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் கடலுக்குள் செல்வதை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 12 ம் தேதி, ரஷ்யாவில் கடலில் சென்று கொண்டிருந்த குர்ஸ்க் ரக அணு நீர் மூழ்கிக் கப்பல் கடலில்மூழ்கியது. இதில் கப்பலில் இருந்த 118 பேரும் இறந்தனர்.

தற்போது, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வுத்துறை தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்வரை எந்த அணு நீர்மூழ்கிக் கப்பலையும் இயக்குவதில்லை என ரஷிய கடற்படை முடிவு செய்துள்ளது. ரஷ்யகடற்படை தலைவர் விளாடிமிர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் செர்கி இவனோவுடன் பேச்சு நடத்திய பின்இந்த முடிவைத் தெரிவித்தார்.

தற்போது பாரன்ட் கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் அணு நீர்மூழ்கிக் கப்பலை அடுத்த ஆண்டு கோடை காலத்தில்தான்மீட்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல், கடலுக்குள் 100 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது.

முன்னதாக, நீரில் மூழ்கி இறந்தவர்களின் சடலங்களை விரைவில் கண்டுபிடித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு,இறந்தவர்களின் உறவினர்கள் அதிபர் விளாடிமிர் புடினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை ஏற்ற அதிபர்புடின், இந்த ஆண்டு குளிர்காலத்துக்குள் உடல்களை மீட்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X