மதுரையில் தொடர்கிறது வன்முறை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரையில் வியாழக்கிழமையும் வன்முறையில் ஈடுபட்டனர்.

வியாழக்கிழமை காலை தங்கன்குளம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த பஸ்சை வன்முறைக் கும்பல் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதே போல் ராமநாதபுர மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து திருச்சி நோக்கு அரசு பஸ்ஒன்று திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ் மதுரை அருகே அபிராமபுரம் பகுதிக்கு வந்தபோது ஆயுதங்களுடன் அந்த பஸ்சை நிறுத்திய கும்பல் ஒன்று பஸ் பயணிகளை இறக்கி விட்டுவிட்டுபஸ்சை எரித்தனர்.

கலெக்டர் விரைந்தார்:

இச்சம்பவம் கேள்விப்பட்டதும் ராமநாதபுரம் கலெக்டர் மணிபாரதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இதனால் வியாழக்கிழமையும் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவியது.

டிஜிபி உத்தரவு:

வன்முறை பரவாமல் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி.குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து டிஜிபி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஜாமீனில் வெளிவரமுடியாதபடி குண்டர்சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்.

ஒரு புறம் வன்முறைச் சம்பவங்கள் நடந்தாலும், மறுபுறம் மதுரை மாவட்டம் கட்டுக்குள்தான் இருக்கிறது. வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதுதொடர்பாக இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 7 க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதமடைந்துள்ளன. மதுரை நகரில் மொத்தம் 2 ஆயிரத்து 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்என்றார்.

இதற்கிடையில் அழகிரியின் ஆதரவாளர்களின் இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு மற்ற கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+