சிட்னி ஒலிம்பிக்: படகுப் போட்டியைக் "காண வந்த" திமிங்கலங்கள்
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் படகுப் போட்டிகள் நடைபெற்று வரும் சிட்னி துறைமுகப் பகுதியில் இரு திமிங்கலங்கள்தென்பட்டன என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தன.
போட்டிகளில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளில் பல்வேறு நாடுகளின் வீரர் மற்றும்வீராங்கனைகள் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது போட்டிகள் நடைபெறும் சிட்னிதுறைமுகப் பகுதியில் திடீரென்று இரு திமிங்கலங்கள் தென்பட்டன.
உடனடியாக போட்டிகள் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. திமிங்கலங்களை போட்டி நடைபெறும்இடத்திலிருந்து வெளியேற்றும் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
துறைமுகப் பகுதியில் இருந்து திமிங்கலங்கள் வெளியேற்றப்பட்ட பிறகு போட்டிகள் தொடங்கின.
திமிங்கலங்கள்தான் எங்களுக்குப் பெரிய பிரச்சினையாக உள்ளன. கடந்த ஆண்டு ஒலிம்பிக் பரிசோதனைப்போட்டி நடைபெற்றபோதும் திமிங்கலங்கள் வந்து தொல்லை கொடுத்தன என்று அதிகாரிகள்தெரிவித்தனர்.
ஒலிம்பிக் விதிமுறைகளின்படி, போட்டி நடைபெறும் பகுதியில் திமிங்கலங்கள் தென்பட்டால் போட்டிகள்நிறுத்தப்படவேண்டும். மேலும், திமிங்கலங்களை 50 மீட்டர் வரை நெருங்குவது சட்டவிரோதம்.












Click it and Unblock the Notifications