For Daily Alerts
Just In
புரட்சித் தலைவரிடமிருந்து புரட்சித் தலைவியிடம் அடைக்கலம்
சென்னை:
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தொடங்கியுள்ள கட்சியில் சேர்வதாக அறிவித்திருந்தமுன்னாள் அமைச்சர் பொன்னையன் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவுக்கே சென்றுவிட்டார்.
முன்னாள் அமைச்சரான பொன்னையன், எம்.ஜி.ஆர். அமைச்சரவையில்போக்குவரத்து அமைச்சராக இருந்தவர். எம்.ஜி.ஆர். இறந்த பின் அரசியல் வன வாசம்மேற்கொண்டார்.
இந்த நிலையில், அவரைப் போலவே வனவாசத்தில் இருந்த எஸ்.டி.எஸ்., பண்ருட்டிராமச்சந்திரன், ராஜாராம் போன்ற முன்னாள் அமைச்சர்கள் தொடங்கியபுரட்சித்தலைவர் அதிமுகவில் சேர்ந்தார்.
இப்போது திடீரென அக்கட்சியிலிருந்து விலகி, "அம்மாவின் அதிமுகவிற்கே சென்றுவிட்டார். வெள்ளிக்கிழமை மாலை, ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில்மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
Comments
Story first published: Saturday, September 23, 2000, 5:30 [IST]