காஷ்மீர் வருகிறது ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் குழு
டெல்லி:
ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பிரதிநிதிகள் குழு, தீவிரவாதத்தால்பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆய்வு நடத்துவதற்காக அடுத்தவாரம் இந்தியா வரவிருக்கிறது.
இக்குழுவினர் இம்மாதம் 25-ம் தேதி இந்தியா வருகிறார்கள்.
குழுவில் ஐரோப்பிய யூனியனின் தூதர் மைக்கேல் கைலோயுட் மற்றும் பெல்ஜியம்,போர்ச்சுகல், ஸ்வீடன் நாட்டின் தூதுவர்களும் கலந்து கொள்வார்கள்.
1994-ம் ஆண்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், காஷ்மீர் நிலவரம் குறித்துஆய்வு செய்யும்படி ஐரோப்பிய யூனியனைக் கேட்டுக் கொண்டது. அதையடுத்து ஆறுமுறை இக்குழுவினர் காஷ்மீர் வந்துள்ளனர். இப்போது 7-வது முறையாக இந்தியாவருகிறார்கள்.
குழுவின் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் மாறுவார். அடுத்த ஆண்டுபெல்ஜியம் நாட்டுத் தூதர் தலைவராக இருப்பார்.
மாநில அரசு, அரசியல் கட்சிகள், அரசு சாராத குழுவினருடனும் மற்றும் பொதுமக்களிடமும் காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறித்து இக்குழுவினர் பேசுவார்கள்.
குழுவினரின் முக்கிய நோக்கம் காஷ்மீர் குறித்த உண்மையை அறிவதும் அது குறித்தரகசிய அறிக்கையை ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தெரிவிப்பதும் ஆகும்.
காஷ்மீரிலிருந்து திரும்பிய பின்பு இந்தக் குழுவினர் இந்திய அதிகாரிகளுடன் தங்கள்கருத்துகளையும் பரிமாறிக் கொள்வர்.
ஐரோப்பிய யூனியன் குழுவினர், ஹுரியத் அமைப்பின் பிரதிநிதிகளையும்,மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியினரையும் சந்தித்துபேச்சு வார்த்தை நடத்துவார்கள்.அதன் பின் 11 ஆண்டு காலமாக தீவிரவாதிகளால்பாதிக்கப்பட்டு வரும் இந்து பண்டிட்களையும் சந்தித்து பேசுவார்கள் எனத் தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications