எல்லைப் பகுதி மக்களை இடம் மாற்றுகிறது ராணுவம்
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குஅருகே உள்ள 17 கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற ராணுவம் முடிவுசெய்துள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்கும வகையில் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது. எல்லையைக் கடந்து ஊடுறுவி இந்தியாவுக்குள் நுழையும்தீவிரவாதிகள், எல்லைப் பகுதியில் வாழும் மக்களோடு கலந்து விடுகின்றனர்.
இதைத் தடுக்க, எல்லைப் பகுதி கிராம மக்களை அங்கிருந்து இடம் மாற்ற ராணுவம்நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதகுழுக்களுக்கு தரும் ஆதரவை அதிகப்படுத்தியதும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தவறான பிரச்சாரத்தால், எல்லைப்புற கிராம மக்கள்கவரப்படுவதையும் இது தவிர்க்கும் என்று ராணுவம் நினைக்கிறது.
இதுகுறித்து ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கன்னா நிருபர்களிடம்கூறுகையில், ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை சமீப காலத்தில்இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்தப் பகுதியில் 500 முதல் 600 தீவிரவாதிகள் இருந்தனர் அது இப்போது இரண்டுமடங்காகி உள்ளது. அதிக அளவில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள்அனுப்பி வருவதாலும், இந்தியாவில் உள்ள இளைஞர்களை தீவிரவாதிக் குழுக்கள்தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டுள்ளதாலும் இந்த எண்ணிக்கைஅதிகரித்துள்ளது.
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இந்தியர்கள் என்ற தவறான எண்ணத்தைஉருவாக்குவதற்காகத்தான், இந்திய இளைஞர்களை தீவிரவாதிகள் தங்கள் இயக்கத்தில்சேர்த்துக் கொள்கின்றனர்.
ஜம்மு பகுதியில் உள்ள தீவிரவாதிகளில் 50 சதவிகிதம் பேர் வெளிநாட்டைச்சேர்ந்தவர்கள். ராணுவம் திவிரவாதிகளின் பலத்தை அவர்களின் ரேடியோ தகவலைவழிமறித்துக் கேட்பதன் மூலமும், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் கொடுக்கும்தகவல் மூலமும் அறிந்து கொள்கிறது.
1997-ம் ஆண்டு 222 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 1998-ம் ஆண்டு 357 பேரும்கொல்லப்பட்டனர். 1999-ம் வருடம் 458 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தஆண்டு இதுவரையிலான ஒன்பதரை மாதத்தில் 550 தீவிரவாதிகள்கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு பகுதியில் உள்ள 100 கிலோமீட்டர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைபாகிஸ்தான் மதிப்பதில்லை. இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச எல்லைஅமைப்பது இந்தியாவைப் பொருத்தவரை மிகவும் முக்கியமானதாகும். எல்லைதாண்டிய தீவிரவாதத்தையும், போதைப் பொருள் கடத்தலையும் தடுக்க இது உதவும்என கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.