தீவிரவாதப் பயிற்சியில் 27,000 காஷ்மீர் இளைஞர்கள்
ஸ்ரீநகர்:
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிலிருந்து இதுவரை 27,000 காஷ்மீர்இளைஞர்கள் தீவிரவாதப் பயிற்சி பெறுவதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீருக்குள் ஊடுறுவியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாதப் பயிற்சி பெற்று இதுவரை 24,000 இளைஞர்கள் மீண்டும் காஷமீருக்கேதிரும்பி வந்து விட்டனர். ஆனால் 3000 இளைஞர்கள் கதி என்ன என்றுதெரியவில்லை. இந்திய பாதுகாப்புப் படை வட்டாரம் மேற்கொண்ட ஆய்வில் இதுதெரிய வந்துள்ளது.
1989-ம் ஆண்டில்தான் முதன் முதலாக தீவிரவாதிகள் பெரிய அளவில் ஊடுறுவலைத்தொடங்கினர். அதன் பிறகு கணிசமான அளவில் தீவிரவாதிகள் ஊடுறுவல் நடந்துவருகிறது.
கடந்த 11 ஆண்டுகளாக ஆண்டுக்கு 3000 காஷ்மீர் இளைஞர்கள் வீதம்பாகிஸ்தானுக்குள் சென்று தீவிரவாதப் பயிற்சி பெற்று வருகின்றனர் என்றுகூறப்படுகிறது.
1990-91-ம் ஆண்டிற்கு இடையே மொத்தம் 6000 இளைஞர்கள் பாக் ஆதரவுகாஷ்மீருக்குள் சென்று பயிற்சி பெற்றதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவிக்கிறது. இது1992-ல் 5000ஆக குறைந்தது. அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது ஆண்டுக்கு4000 என்ற அளவிற்கு வந்தது. 90களின் நடுவில் இது 150 ஆக குறைந்தது.
இந்த நிலையில் காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதப் பயிற்சிக்குச் செல்வது 1996- முதலமீண்டும் அதிகரிக்கத் துவங்கியது. 98 வரை ஆண்டுக்கு 300 பேர் வரை சென்றுவந்தனர். 99-ல் இது 500 ஆக அதிகரித்தது. இப்போது இந்த மாதம் வரை 900 பேர்வரை பாகிஸ்தானிற்குள் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.