பளுதூக்குதல்: கிரீஸ் வீரர் பைரோஸ் டிமாஸ் தங்கம் வென்று சாதனை
சிட்னி:
பளுதூக்குதல் போட்டியில் ஆண்களுக்கான 85 கிலோ எடைப் பிரிவில் கிரீஸ் நாட்டின்பைரோஸ் டிமாஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் மொத்தம் 390 கிலோ எடைதூக்கினார்.
இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக இப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுஅவர் சாதனை படைத்துள்ளார். பார்சிலோனா, அட்லாண்டா ஒலிம்பிக்கில் அவர்தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
ஒலிம்பிக் வரலாற்றில் பளுதூக்கும் போட்டியில் ஒரே பிரிவில் தொடர்ந்து மூன்றாவதுமுறையாகத் தங்கம் வென்ற இரண்டாவது நபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
துருக்கியின் நாயின் சுலேமானோக்லு சியோல், பார்சிலோனா, அட்லாண்டா ஆகியஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வாங்கி சாதனை படைத்தார். இந்த முறைசிட்னி ஒலிம்பிக்கில் அவர் தோற்றுவிட்டார்.
சனிக்கிழமை நடந்த போட்டியில் ஜெர்மனியின் மார்க் ஹஸ்டர் வெள்ளியும்,ஜியார்ஜியாவின் அஸானிட்ஸே வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மூன்று பேரும் 390 என ஒரே எடையைத் தூக்கினர். ஆனால், உடல் எடை குறைவுகாரணமாக தங்கப் பதக்கத்தை டிமாஸ் வென்றார். ஜெர்மனி வீரருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
முதன் முறையாக ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் ஜியார்ஜியாவுக்கு ஒருபதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications