குத்துச்சண்டை: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் குர்சரண் சிங்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
குத்துச்சண்டைப் போட்டியில் ஆண்களுக்கான 81 கிலோ எடைப் பிரிவில் 2-வதுசுற்றில் இந்தியாவின் குர்சரண் சிங் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் தென் ஆப்பிரிக்காவின் டேனிவென்டெரைத் தோற்கடித்தார்.
சிட்னி ஒலிம்பிக்கில் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் சார்பில் 4 பேர் கலந்துகொண்டனர். இப்போது குர்சரண் சிங் மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற்று களத்தில்உள்ளார். மற்ற 3 பேரும் தங்களது பிரிவு ஆட்டங்களில் தோற்று வெளியேறிவிட்டனர்.
குர்சரண் சிங் தனது அடுத்து சுற்றில் வெற்றி பெற்றால் இந்தியாவுக்குப் பதக்கம்கிடைக்கு வாய்ப்பு பிரகாசமடையும். இந்தாலும், அடுத்த இரு போட்டிகளில் அவர்வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு நிச்சயம் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிடும்.












Click it and Unblock the Notifications