பா.ம.க அமைச்சர்கள் மீது புதுவை காங். தலைவர் புகார்
பாண்டிச்சேரி:
கடலூர் மாவட்டத்தில் பா.ம.கவினர் நடத்திய வன்முறை குறித்து பாரபட்சமாககருத்துக் கூறிய மத்திய அமைச்சர்கள் சண்முகம், பொன்னுச்சாமி ஆகிய இருவரும்அமைச்சர் பதவி வகிக்கும் தகுதியை இழந்து விட்டார்கள் என்று பாண்டிச்சேரி மாநிலகாங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுவையில் பா.ம.க. தலைவர் ராமதாஸ் மீது தாக்குதல்நடத்தப்பட்டது. இதையடுத்து புதுவை, கடலூர் பகுதிகளில் பெரும் வன்முறைமூண்டது. இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் சண்முகமும், பொன்னுச்சாமியும் கருத்துத்தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இருவரும் மத்தியஅமைச்சர்களாக உளளனர். பா.ம.க. உறுப்பினர்களாக தங்களை எண்ணிக் கொள்ளக்கூடாது அவர்கள்.
கலவரப் பகுதிக்குச் சென்ற அவர்கள் ஹரிஜன மக்கள் வாழும் பகுதிகளுக்குச் செல்லத்தவறி விட்டனர். அரசியல் எதிரிகளை பழிவாங்க இந்த வன்முறையைமேற்கொண்டுள்ளது பா.ம.க என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications