திமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்
சென்னை:
திமுக முன்னாள் எம்எல்ஏ திருவொற்றியூர் பழனிச்சாமி ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 70.
பழனிச்சாமி கடந்த 1989 முதல் 1991 ம் ஆண்டு வரை திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நகராட்சித் தலைவராகவும், திமுகநகரச் செயலாளராகவும் அவர் பதவி வகித்தார்.
முதல்வர் இரங்கல்:
பழனிச்சாமியின் மறைவு குறித்து முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். திமுகவை உயிர்மூச்சாகக் கொண்டு, உழைத்த திருவெற்றியூர் பழனிச்சாமிமறைந்துவிட்ட செய்தி கேட்டு மனம் நொந்து போனேன்.
நகர செயலாளராக, நகராட்சிச் செயலாளராக, நகராட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக வகித்த பொறுப்புக்கள் அனைத்திலும் ஒளிவிட்டுபிரகாசித்தார்.
அவரது மறைவினால் அதிர்ச்சியடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications