கருணாநிதி கொடும்பாவியை எரிப்போம் ... வாட்டாள் நாகராஜ்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி 28-ம் தேதி கர்நாடக பந்த் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பு கர்நாடகத்தின் 20 நகரங்களில் தமிழக முதல்வர்கருணாநிதியின் உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடத்தப்படும் என கனனட சளுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடிகர் ராஜ்குமாரை பத்திரமாக விடுவிக்க வேண்டும் என்று கோரி 28-ம் தேதிகர்நாடகம் முழுவதும் பந்த் நடத்தப்படவுள்ளது.
கர்நாடக பந்த்துக்கு ஆதரவு திரட்டும் விதத்தில், பந்த்துக்க முன்பாக பெல்காம், ஹூப்ளி, தார்வாட், தாவணகரே, சித்ரதுர்கா, கோலார், மண்டியா, மைசூர்ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளோம். பின்னர் இந்த மாவட்டங்களில் 20 நகரங்களில் கருணாநிதியின் உருவ பொம்மையை எரிக்கதிட்டமிட்டுள்ளோம் என்றார் வாட்டாள் நாகராஜ்.












Click it and Unblock the Notifications