மீண்டும் புரட்சி வரும் ...எச்சரிக்கிறது பிஜி ராணுவம்
சுவா:
பிஜியில் 1997-ம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் மீண்டும் புரட்சி நடக்கும் என்று ராணுவம் எச்சரித்துள்ளது.
1997-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டப்படி, பிஜியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் உள்பட யார் வேண்டுமானாலும் அதிபர் உள்படஅனைத்து உயர் பதவிகளையும் வகிக்க வகை செய்யப்பட்டது.
இதன் படி நடந்த முதல் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர செளத்ரி முதல் அதிபர் ஆனார். ஆனால் ஒரு ஆண்டு கழிந்த நிலையில் அவரதுஆட்சியை, பிஜி இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்பீட் புரட்சி மூலம் கவிழ்த்தார்.
இந்த நிலையில் மீண்டும் 1997-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை கொண்டு வர முயன்றால், மீண்டும் புரட்சி வெடிக்கும் என ராணுவம் எச்சரித்துள்ளது.
ராணுவச் செய்தித்தொசடர்பாளர் மேஜர் ஹோவர்ட் பொலிடினி இதுகுறித்து தலைநகர் சுவாவில் கூறுகையில், 1997-ம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல்சாசனத்தை ராணுவம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் அதன் பிறகு மீண்டும் ஒரு புரட்சி வெடிக்கும் அபாயம் உள்ளது. அதை எங்களால் தடுக்க முடியாது.எனவே மீண்டும் பிஜியில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும்.
பிஜியில் மே 19-ம் தேதி நடந்த புரட்சிக்கும், அதன் பிறகு நாட்டில் நடந்த குழப்பத்துக்கும் இந்த அரசியல் சாசனமும் ஒரு காரணம் என்பதை யாரும்மறந்து விடக் கூடாது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications