வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கோவை:
கோவை அருகே வனத் துறையினருக்கும், தந்தம் கடத்தும் கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.இறுதியில், இந்தக் கும்பல் கேரள வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது.
கோவை அருகே பூளுவாம்பட்டி என்ற இடத்தில் வனத் துறையினர் முகாமிட்டுள்ளனர். இந்த முகாமில், 40க்கும்மேற்பட்ட வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 17 பேர் கொண்ட ஒரு கும்பலின், நடமாட்டத்தைக்கண்டுபிடித்தனர். இவர்களை வனத்துறையினர் சுற்றி வளைக்க முயன்றபோது, அவர்கள் தங்களிடமிருந்தவேட்டைத் துப்பாக்கியால் வனத்துறையினரை நோக்கிச் சுட முயன்றனர்.
இதையடுத்து வனத்துறையினர் திருப்பிச் சுட்டனர். இந்த சண்டையில் இருதரப்பினருக்கும் எவ்வித பாதிப்பும்ஏற்படவில்லை. ஆனால், கடத்தல் கும்பலை வனத்துறையினர் தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.
தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடன் சென்ற இக்கும்பல், கேரள மாநிலத்திற்குள் தப்பி ஓடிவிட்டது. யானைகளை வேட்டையாடும் இக்கும்பல், காட்டின் பல இடங்களில் யானைகளைக் கொன்றுகுவித்துள்ளது.