வளைகுடா நாடுகளைக் கலக்கிய ஈரானின் ஏவுகணைச் சோதனை
துபாய்:
வளைகுடா நாடுகளின் அச்சத்தை அதிகரிக்கும் வகையில் ஈரான் தனது முதலாவதுதிட-திரவ எரிபொருள் பயன்படுத்திய ஏவுகணையைை ஏவிச் சோதனை செய்துள்ளது.
ஈரானின் இந்த ஏவுகணைச் சோதனை இந்த வாரத் துவக்கத்தில் நடந்துள்ளது. சோதனைவெற்றிகரமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் கடற்படைக்காக இந்தஏவுகணைத் தயாரிக்கப்படும் என்று தெரிகிறது.
ஷாஹாப்-3டி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை குறித்து ஏற்கனவே ஈரான் கூறிவந்தது. இருப்பினும் இதை ராணுவ பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த மாட்டோம்என்றும் அது கூறியுள்ளது.
இதற்கிடையே ஈரானிலேயே தயாரிக்கப்பட்ட கடற்படைக் கப்பல் விரைவில்பயன்பாட்டுக்கு வரும் என்று ஈரான் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான இர்னாகூறியுள்ளது.
ராக்கெட் லாஞ்சராகவும், டெஸ்ட்ராயராகவும் இந்தக் கப்பல் பயன்படுத்தப்படும்.ஈரான்-ஈராக் போரின் 20-வது ஆண்டு தினத்தையொட்டி இந்த புதிய கப்பல்செயல்பாட்டுக்கு வரும்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications