பாக். தீவிரவாதிகள் வசம் கார்கில் குன்றுகள்?
கொஹத் (பாகிஸ்தான்):
கார்கில் பகுதியில் உள்ள பல மலைச் சிகரங்கள் இன்னும் பாகிஸ்தான் ஆதரவுதீவிரவாதிகள் வசமே உள்ளதாக அல் பாதர் என்ற தீவிரவாத அமைப்புத் தலைவர் பக்த்ஸமீன் கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தானிலுள்ள கொஹத் நகரில் அவர் சனிக்கிழமை அளித்த பேட்டியில்இத்தகவலைத் தெரிவித்தார்.
ஸமீன் கான் அளித்த பேட்டி:
கார்கில் பிரதேசத்தில் உள்ள குன்றுகள் இன்னும் தீவிரவாதிகள் கையில்தான் உள்ளது.இதை பல மேற்கத்திய நாடுகளின் பத்திரிகைகளும் செய்திகளாக வெளியிட்டு உறுதிசெய்துள்ளன.
இந்தியாவுக்கு எதிரான எங்களது புனிதப் போரை (ஜிஹாத்) நிறுத்த மாட்டோம்.காஷ்மீரை விடுவிக்கும் வரை எங்களது போர் தொடரும்.
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர்கிராமங்களில் சமீபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான்வீரர்களை பதற்றப்படுத்துவதற்காக இவ்வாறு செய்கிறது இந்தியா என்றார் அவர்.
இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சர்வதேச எல்லைப் பகுதியில்இந்தியா ராணுவத்தைக் குவித்து வருவதாக ஜமாத் இ இஸ்லாமி என்ற தீவிரவாதஅமைப்பு குறை கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் நடந்தகுண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் இந்திய புலனாய்வுத் துறைஉள்ளதாகவும் அது கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications