For Daily Alerts
Just In
கொலுவுக்குத் தயராகும் மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை:
மதுரையில் அரசியல் அமளிதுளிகள் ஒருபுறமிருக்க, கோலாகலமாக நவராத்திரி விழாவுக்கு தயாராகி வருகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா வருகின்ற 28-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 6 ம் தேதி வரை நடக்கிறது.
நவராத்திரி கலைவிழாவையொட்டி கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மதுரை மீனாட்சி கோவில்மூலஸ்தான அம்மனுக்கு இரண்டு கிலோ தங்கத்திலான க்ரீடம், உபயதாரர்கள் மூலம் சாத்தப்படவுள்ளது.
விழாவை முன்னிட்டு, கோவிலில் உள்ள சிற்ப நுட்பங்களுடன் கூடிய தூண்கள், கற்சுவர்கள், கூரைகள் ஆகியவை பதினெட்டு லட்ச ரூபாய் செலவில் சுத்தம்செய்யப்படுகிறது. இன்னொரு உற்சாக ஜொலிப்பிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது மீனாட்சி அம்மன் கோவில்.
Comments
Story first published: Sunday, September 24, 2000, 5:30 [IST]