கிண்டல் செய்யும் ஆண்களை செருப்பால் அடியுங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கிண்டல் செய்யும் ஆண்களை செருப்பால் அடியுங்கள் என்று சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய நீதிபதி மோகன்தெரிவித்தார்.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான குரல்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசி நீதிபதி மோகன்கூறியதாவது:

பெண்களை ஆண்கள் கிண்டல் அடித்தல், பெண்களைப் பார்த்து விசில் அடித்தல், புடவையைப் பிடித்து இழுத்தல் என அனைத்து வகையான குற்றங்களும் ஆண்களுக்குதண்டனை தர சட்டத்தில் இடம் உள்ளது. பெண்களைக் கிண்டல் அடித்தால் நீங்கள் செருப்பைக் கழற்றி அடியுங்கள். அப்படி இல்லை என்றால் அருகில் உள்ளகாவல் நிலையத்திலாவது புகார் செய்யுங்கள்.

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்க, அதுபற்றிய சட்டங்களை அமல்படுத்த மத்திய-மாநில அரசுகள் தனியாக செல்களை அமைக்கவேண்டும். இது மிகவும் அவசியம். பெண்களுக்கு ஆலோசனை வழங்க பெரிய அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்.

பெண்களுக்கு நீதி கிடைக்க பெண் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். பெண் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். அதற்கும் பெண் போலீஸாரை அமைக்கவேண்டும். சமூகத்தில் அங்கீகாரம் பெற்ற நல்ல மனிதர்களை காவல் நிலையங்களில் பாதுகாவலர்களாக நியமிக்க வேண்டும்.

பெண்களுக்கு பொருளாதார உரிமைகள் வழங்கினால் பாதுகாப்பு கிடைக்கும். நமது நாட்டில் 52 சதவீதம் பெண்கள் உள்ளனர். ஆனால் உங்களுக்கு 33சதவீத இட ஒதுக்கீடு தர மறுக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர வேண்டும். இந்த இடஒதுக்கீட்டைபெற நீங்கள் போராட வேண்டும் என்றார் நீதிபதி மோகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+