கூட்டணித் தலைவர்களுக்கு ஜெ. தந்த விருந்து
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு சனிக்கிழமைவிருந்தளித்தார்.
அதிமுக கூட்டணிக்கட்சிகளின் சார்பில் பெரியாரின் 122 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா, மூப்பனார் ஆகியோர் இவ்விழாவைஇணைந்து நடத்தினர்.
இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, குலாம் நபி ஆசாத், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், பரதன், பிரகாஷ் அம்பேத்கர், வீரமணி, இளங்கோவன், நல்லகண்ணு, லத்தீப்,திருமாவளவன், வடிவேலு, தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழா முடிந்தபின் போயஸ் தோட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு ஜெயலலிதா சார்பில் விருந்தளிக்கப்பட்டது.
திமுக முப்பெரும் விழாவில் த.மா.காவை கருணாநிதி கடுமையாக தாக்கி பேசியதை தொடர்ந்து, ஜெயலலிதா, மூப்பனார் அரசியல் நெருக்கம் அதிகரித்துவருவதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.
அதை உறுதி செய்யும் வகையில் சனிக்கிழமை காலை ஜெயலலிதா தொலைபேசி மூலம் மூப்பனாருடன் தொடர்பு கொண்டு விருந்துக்கு அழைப்பு விடுத்தார்.இதை மூப்பனாரும் ஏற்றுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications