2 குழந்தைளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை
டெல்லி:
மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர்கள்பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட தடை செய்யப்படும் என்று அம்மாநில அரசுகூறியுள்ளது.
மாநில முதல்வர் திக்விஜய் சிங் இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம்கூறுகையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும்.
டெல்லியில் நடந்த மூன்று நாள் சர்வதேச மக்கள் தொகை மாநாட்டில் கலந்து கொண்டபிறகு இவ்வாறு தெரிவித்தார் திக்விஜய் சிங். மாநாட்டில் அவர் பேசுகையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைப் பொருத்தவரை சீன மற்றும் கேரள மாதிரியை அனைவரும்பின்பற்ற வேண்டும். இந்த இரு மாடலும் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
இரண்டு குழந்தைளுக்கு மேல் இருப்பவர்கள், பஞ்சாயத்துத் தேர்தல் உள்படஉள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிப்பது குறித்துமகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் அமைக்கப்பட்ட மக்கள் தொகைக்கட்டுப்பாட்டு ஆய்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அது மத்திய பிரதேசத்திலும்அமல்படுத்தப்படும் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.