எண்ணெய் விலையை உயர்த்த "தடை நீங்கியது
டெல்லி:
எண்ணெய் விலையை உயர்த்த மத்திய அரசுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ளகட்சிகளின் தலைவர்கள் ஒப்புதல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைவில் விலைஉயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
விலையை உயர்த்த ஒப்புதல் கொடுத்துள்ள கூட்டணிக் கட்சிகள், நுகர்வோருக்குகூடுதல் சுமையை ஏற்படுத்தாத வண்ணம் விலை உயர்வு இருக்க வேண்டும் என்றுஅரசுக்கு நிபந்தனையும் விதித்துள்ளனர்.
எண்ணெய் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்த கூட்டணிக் கட்சிகள், மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்ய அனுமதி கொடுக்கவில்லை.இக்கோரிக்கையை திருனமூல் காங்கிரஸ் விடுத்திருந்தது.
சனிக்கிழமை பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசியதலைவர்கள், நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எண்ணெய் விலைஉயர்வு இருக்க வேண்டும். அதற்கான மாற்று வழி கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பான முடிவு எடுக்க மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம்நாயக்கிற்கு கூட்டணித் தலைவர்கள் அதிகாரம் வழங்கினர். இத்தகவலை கூட்டம்முடிந்த பின் செய்தியாளர்களிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications