For Daily Alerts
Just In
"பாரதி பார்க்கச் சென்ற எழுத்தாளர் ரகமி மரணம்
சென்னை:
பிரபல எழுத்தாளர் ரகமி என்ற ரங்கசாமி சனிக்கிழமை சென்னையில் காலமானார்.
ரகமிக்கு வயது 70. அண்ணாசாலையில், உள்ள ஒரு தியேட்டரில் பாரதி படம்பார்ப்பதற்காக நண்பர் ஒருவருடன் சென்றிருந்தார். மதியக் காட்சி துவங்குவதற்கு முன்நண்பரிடம் சிறிது உடல்நிலை சரியில்லை என்று கூறிய சில நிமிடங்களில் இறந்தார்.
திருவல்லிக்கேணியில் உள்ளஅவரது வீட்டிற்கு சடலம் கொண்டு வரப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.
மறைந்த எழுத்தாளர் ரகமி முன்பு சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றியவர்.பாரதி, வாஞ்சிநாதன் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளார். சுதந்திரப் போராட்ட வரலாறுதொடர்பான கட்டுரைகள் எழுதியவர்.
கடந்த சில ஆண்டுகளாக இருதய நோய் காரணமாக சிரமப்பட்டு வந்தார் ரகமி.இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி மட்டும் இருக்கிறார்.
Story first published: Sunday, September 24, 2000, 5:30 [IST]