For Daily Alerts
Just In
4 ஆண்டுகளில் 1000 பள்ளிகள்
திருச்சி:
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 1000 துவக்கப் பள்ளிகளை மாநில அரசுதிறந்துள்ளதாக மாநில கல்வி அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
திருச்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நிறைவு விழாவில் அவர் பேசுகையில்,ஏற்கனவே உள்ள 30,000 பள்ளிகளுடன் சேர்த்து, கூடுதலாக 1000 துவக்கப் பள்ளிகள்கட்டப்பட்டு, திறக்கப்பட்டுள்ளன.
விரைவில் தமிழகம் முழுவதிலும் மேலும பல துவக்கப் பள்ளிகளைத் திறக்கத்திட்டமிட்டுள்ளோம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் துவக்கக் கல்விக்கு மாநில அரசு பல வசதிகளைச் செய்துதந்துள்ளது. மாநிலத்தில் 3 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசு ஊழியர்கள் பெறும்சம்பளத்தைப் பெறுகின்றனர் என்றார் அன்பழகன்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, September 24, 2000, 5:30 [IST]