50 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் .. புதிய நீதிக் கட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் தனித்து நின்று 50 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று புதிய நீதிக் கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் சென்னையில் சனிக்கிழமை தெரிவித்தார்.
புதிய நீதிக்கட்சியின் வக்கீல்கள் இணைப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
புதிய நீதிக்கட்சியில் இப்போது 411 வக்கீல்கள் பதிவு செய்துள்ளனர். நமது கட்சியில் படித்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த ஏற்பாடு செய்வோம்.
தமிழகத்தில் சமநீதி, சமநிலை இல்லை. ஜெயலலிதா உள்பட முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது வழக்குகள் உள்ளது. இன்னொரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்துபோட்டியிட்டால் 110 க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிப்போம். தனித்து நின்றால் 50 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்சண்முகம்.












Click it and Unblock the Notifications