கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை .. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக தமிழ்த் தடா கைதிகள் மற்றும் தமிழ்த்தீவிரவாதிகளை விடுதலை செய்வதற்கு கர்நாடக, தமிழக அரசுகளுக்கு அதிகாரம்உள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு செய்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள அபிடவிட் மனுவில்,பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை மாநில அரசுகள்எடுத்துள்ளன. இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம்உள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகஇணைச் செயலாளர் துர்காதாஸ் குப்தா இந்த மனுவை தாக்கல் செய்தார்.
வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமாருக்காக மைசூர் ஜெயிலில்அடைக்கப்பட்டுள்ள 121 கைதிகளை விடுவிப்பதை எதிர்த்து மைசூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. அப்துல் கரீம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இதை ஏற்று கைதிகளை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதையடுத்துகர்நாடக, தமிழக அரசுகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.தற்போது மத்திய அரசும் மனு செய்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.