மத்திய அமைச்சர்களுக்கு பாண்டி. முதல்வர் கண்டனம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய வன்முறையால்பாதிக்கப்பட்ட பகுதிகளில் அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்மேற்கொண்டது உள்நோக்கம் கொண்டது என்று மாநில முதல்வர் சண்முகம்கூறியுள்ளார்.
சனிக்கிழமை பாண்டிச்சேரியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், வன்முறைதொடர்பாக இதுவரை 8 பேர் ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பா.ம.க. தொண்டர்கள்.
வன்முறைச் சம்பவம் தொடர்பாக பாரபட்சமின்றி அரசு நடந்து கொள்கிறது. யாருக்குசார்பாகவும் நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ம.க.தலைவர் ராமதாஸ் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.
வன்முறை பாதித்த பகுதிகளில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது, என்னுடன்அதிகாரப்பூர்வ குழுவினரே வந்தனர். ஆனால் மத்திய அமைச்சர்கள் அங்குசென்றபோது, பா.ம.க. எம்.எல்.ஏ., அக்கட்சித் தொண்டர்களே சென்றனர். இதன்மூலம் அரசியல் உள்நோக்கத்துடன் அவர்கள் சென்றுள்ளது தெரிகிறது.
இவர்கள் பாண்டிச்சேரியில் வந்து சுற்றிப் பார்க்க மத்திய அரசு உத்தரவு ஏதும்பிறப்பிக்கவில்லை. ராமதாஸ் தாக்கப்பட்ட காட்டுப்பாளையம், அபிஷேகப்பாக்கம்ஆகிய பகுதிகளுக்கு இவர்கள் செல்லவில்லை.
இக்குழுவினர் பாண்டிச்சேரி ஐ.ஜி. ஜே.பி.சிங்கைக் குறை கூறியுள்ளனர். இதுகண்டிக்கத்தக்கது என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications