பளுதூக்குதல்: 405 கிலோ தூக்கி தங்கம் வென்றார் கிரீஸ் வீரர்
சிட்னி:
பளுதூக்கும் போட்டியில் ஆண்களுக்கான 94 கிலோ எடைப் பிரிவில் கிரீஸ் நாட்டின்அகாகியோஸ் ககியாஸ்விலிஸ் மொத்தம் 405 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் ஸ்நாட்ச் பிரிவில் 185கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 220 கிலோவும் என மொத்தம் 405 கிலோஎடை தூக்கினார்.
இப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் தங்கம்வென்ற மூன்றாவது பளுதூக்கும் வீரர் என்ற பெருமையை ககியாஸ்விலிஸ் பெற்றார்.
ஏற்கெனவே பார்சிலோனா மற்றும் அட்லாண்டா ஒலிம்பிக்கில் இவர் தங்கப் பதக்கம்வென்றார்.
கிரீஸ் நாட்டின் பைரோஸ் டிமாஸ், துருக்கியின் நாயிம் சுலைமானோக்ளு ஆகியோர்மட்டுமே தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் போலந்தின் சைமன் கோலெக்கி வெள்ளியும்,ரஷ்யாவின் அலெக்ஸி பெட்ரோவ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.