வேன் கிணற்றில் விழுந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் அருகே வேன் கிணற்றுக்குள் விழுந்ததில் மூன்று பேர் இறந்தனர்.
வேலூரிலிருந்து சென்னை நோக்கி மாருதி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் ஞாயிற்றுக்கிழமை சுமார் 2.30 மணியளவில் ராணிப்பேட்டைபைபாஸ் சாலையில் உள்ள தோல் கம்பெனிக்கு அருகே சாலையோரத்தில் உள்ள கிணற்றிற்குள் விழுந்தது.
இதில், வேனில் இருந்த சென்னையைச் சேர்ந்த மஜித் (65), ஷேக் அப்துல்லா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்தில் காயமடைந்தஇக்பால் (40) வாலாஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மாருதி வேனில் பயணம் செய்த இரு பெண்கள் மற்றும் டிரைவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications