காதலுக்கு தடை .. காதலியைக் கொன்று வாலிபர் தற்கொலை
டெல்லி:
ஐந்து மாதமாக காதலித்து வந்த காதலியைத் திருமணம் செய்த தடைவிதிக்கப்பட்டதால், காதலியைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார் இளைஞர் ஒருவர்.
டெல்லியில் வாழ்ந்து வருபவர் சதீஷ் என்ற 25 வயது வாலிபர். இவர் வடக்குடெல்லியில் உள்ள சர்தார் பஜார் பகுதியில் வசித்து வந்தார். இவர் வீட்டுக்கு அருகேவசித்து வந்தவர் ரஜினி (17). இருவரும் ஒன்று விட்ட சகோதர, சகோதரி ஆவர்.இருப்பினும் ரஜினி மீது சதீஷுக்கு காதல் பிறந்தது.
ரஜினிக்கும், சதீஷ் மேல் காதல் பிறந்தது. இருவரும் 5 மாதங்களாக காதல் புரிந்துவந்தனர். இவர்கள் காதல் விவகாரம் வீட்டினருக்கு தெரிந்ததும் இவர்கள் இருவருக்கும்சகோதர முறை இருப்பதால் காதலுக்கு தடை பிறந்தது.
சம்பவ தினத்தன்று சதீஷ் ரஜினி வீட்டிற்கு சென்றார். அப்போது ரஜினியின் அம்மாவீட்டில் இல்லை. ரஜினியை வீட்டுக்கு வெளியே அழைத்த சதீஷ் தங்களது காதலைதொடரலாம் எனக் கூறினார். அதற்கு ரஜினி மறுக்கவே அவரை சுட்டுக் கொன்று விட்டுதானும் சுட்டுக் கொண்டார்.
இருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அங்கு அவர்கள்இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications