For Daily Alerts
Just In
வன்முறையில் பலியான பெண் குடும்பத்திற்கு பா.ம.க. நிதியுதவி
சென்னை:
பா.ம.க. நடத்திய வன்முறையில் பலியான பெண் குடும்பத்திற்கு அக்கட்சி சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
பாண்டிச்சேரி அபிஷேகப்பாக்கம் அருகே டாக்டர் ராமதாஸ் கார் மீது தாக்குதல் நடந்ததை தொடர்ந்து வன்முறை வெடித்தது. விக்கிரவாண்டி அருகே அரசுபஸ் மீது கும்பல் ஒன்று கல் வீசியது. அதில் ரேவதி என்ற பெண் பலியானார்.
இதையடுத்து ரேவதியின் குடும்பத்துக்கு பாமக சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அதன்படி முதல்கட்டமாக திங்கள் கிழமை ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மீதி பணத்தை அடுத்த மாதம்3ம் தேதி ராமதாஸ் வழங்குவார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Monday, September 25, 2000, 5:30 [IST]