பிலிப்பைன்ஸ் ராணுவ தாக்குதலில் 100 தீவிரவாதிகள் பலி

Subscribe to Oneindia Tamil

ஜோலோ (பிலிப்பைன்ஸ்):

பிலிப்பைன்ஸில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட முஸ்லீம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பிலிப்பைன்ஸ் பிரிகேடியர் ஜெனரல் நார்சிசோ அபாயா இதுகுறித்து கூறியதாவது:

தலைநகர் மணிலாவிலிருந்து 960 கிலோமீட்டர் பகுதியில் உள்ளது ஜோலோ தீவு. இங்குள்ள முஸ்லீம் தீவிரவாதிகள், 17 பேரைப் பிணைக் கைதிகளாகப்பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க அதிரடி நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு செப்டம்பர் 16 ம் தேதி அதிபர் ஜோசப் எஸ்டிரேடா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் அப்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இத்தாக்குதலில்இதுவரை 100 க்கும் மேற்பட்ட முஸ்லீம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடந்த இடத்திற்கு சாம்போன்கா பகுதியிலிருந்து பத்திரிக்கையாளர்கள் கடற்படை படகு மூலம் அழைத்து வரப்பட்டனர். முதன் முறையாகஅப்பகுதிக்கு அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு தாக்குதல் பற்றி எடுத்துக் கூறப்பட்டது என்றார் அபாயா.

இதற்கிடையே, ஜோலோ தீவில் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் அப்பாவிப் பொதுமக்கள் பலர்பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்களில் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராணுவம் தடை விதித்திருப்பதால் அவர்களால்தாக்குதல் நடத்தும் இடங்களிலிருந்தும் வெளியேற முடியவில்லை என்று ஒரு மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார்.

ராய்ட்டர்ஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+