For Daily Alerts
Just In
தீக்குளித்து இறந்த தொண்டர் குடும்பத்துக்கு அழகிரி உதவி
மதுரை:
தனக்கு ஆதரவு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட தி.மு.க தொண்டர் குடும்பத்திற்கு மு.க.அழகிரி 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
முதல்வர் மகன் அழகிரிக்கு எதிராக தி.மு.க தலைமை எடுத்த நடவடிக்கையை கண்டித்து மதுரை தத்தனேரியை சேர்ந்த காளிமுத்து (34) என்பவர்தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இவர் 21வது வட்ட தி.மு.க. பொருளாளர். இவருக்கு பொன்னுத்தாய் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
காளிமுத்து வீட்டுக்கு திங்கள் கிழமை அழகிரி சென்று ஆறுதல் கூறினார். அந்த குழந்தைகளின் படிப்புச் செலவுக்காக ரூ.50 ஆயிரத்தை வழங்கினார்.குடும்பச் செலவுக்காக பொன்னுத்தாயிடம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
காளிமுத்து கடன் தொல்லையால் தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
Comments
Story first published: Monday, September 25, 2000, 5:30 [IST]