போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 5 நக்சலைட்டுக்கள் பலி
மரிமாட்லா (ஆந்திரா):
போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மக்கள் போர்ப் படையைச் சேர்ந்த 5 நக்சலைட்டுகள் இறந்தனர்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை ஆந்திராவில் நிசாமாபாத்- கரீம்நகர் மாவட்ட மாவட்ட எல்லைப் பகுதியில் நடந்தது.
இறந்த நக்சலைட்டுக்கள் பெயர் வினோத், ரஜிதா, எல்லண்ணா மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர். இதுகுறித்து போலீஸ் எஸ்.பி.நளின் பிரபாத்கூறுகையில், மக்கள் போர்ப் படையினர் மரிமாட்லா கிராமத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அப்பகுதிக்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது மேற்கண்ட 5 நக்சலைட்டுக்களும் இறந்தனர். பிரசாத், சோமண்ணாஉள்பட பிற நக்சலைட்டுக்கள் தப்பியோடி விட்டனர்.
அப்பகுதியில் போலீஸார் வெடிமருந்துகள், 13 கண்ணிவெடிகள், மருந்துப் பொருட்கள், பாட்டில்கள் மற்றும் கொடிகளைப் பறிமுதல் செய்துள்ளோம்என்றார்.