ஒரே ஒரு வெண்கலம்: வெட்கக்கேடு என்கிறார் ராமதாஸ்
நாகர்கோவில்:
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாகர்கோவிலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். சிட்னியில் நிடக்கும் ஒலிம்பிக்போட்டி பற்றி மிகவும் கவலையோடு பேசினார் ராமதாஸ்.
சிட்னியில் நடக்கும் போட்டியில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பதக்கங்களை போட்டி போட்டுக்கொண்டு குவிக்கின்றன.ஆனால் 100 கோடி மக்களைக்கொண்ட இந்தியா ஒரே ஒரு வெண்கல பதக்கம் மட்டும் பெற்றிருக்கிறது. வெட்கப்பட வேண்டியநிலையில் இருக்கிறோம் நாம்.
ஆரம்ப கல்வியிலேயே விளையாட்டை ஊக்கப்படுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க அணுகுறையில் எந்த மாற்றம் இருக்காது. தி.மு.க கூட்டணி தொடரும் பாண்டிச்சேரியில்நடந்த சம்பவத்திற்கு ஐ.ஜி என்னிடம் மன்னிப்புக்கேட்டார். போதுமான பாதுகாப்பு இல்லாததால் தான் என்னை திட்டமிட்டு தாக்கமுயற்சி நடந்திருக்கிறது.
இந்த சம்பவத்திற்குப்பிறகுதான் தமிழ்நாட்டிலும் எனக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக நாகர்கோவிலுக்கு செல்லும் வழியில் விழுப்புரத்தில் நிருபர்களை சந்தித்த ராமதாஸ்
தமிழக அரசுக்கு என் உயிர் முக்கியமில்லை என்று காரசாரமாக பேட்டி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், இது வரை தி.மு.க வை கடுமையாக தாக்கிவந்த ராமதாஸ், தி.மு.கவுடன் தான் கூட்டணி என்றுசொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
என்ன நடந்தது ஒரே நாளில்...?