சென்னையில் ரூ 37 கோடியில் போலீஸ் அகாடமி
சென்னை:
சென்னையில் ரூ 37 கோடி ரூபாய் மதிப்பில் போலீஸ் அகாடமி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சென்னையில் நடந்த 44 வது அகில இந்திய காவல் பணித் திறனாய்வு போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி கூறியதாவது:
தீவிரவாதிகளிடமிருந்து நாட்டுக்கு பெரும், அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை முறியடிக்க பயிற்சி பெற்ற, ஆற்றல் மிகுந்தகாவல்காரர்களால் மட்டுமே முடியும். நான் இப்போது 4 வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளேன்.
இந்நிலையில், தமிழக காவலர் வீட்டு வசதிக்கழகம் மூலம் காவலர்களுக்கென ஆண்டுதோறும் குடியிருப்புக்களை கட்டி வருகிறது. காவல்துறையைநவீனமயமாக்க தமிழக அரசு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது.
காவல்துறையினர் தொழில்நுட்ப நடைமுறை உள்ளிட்ட பல்வேறு பணித்திறன்களில் படிப்படியாக மாற்றங்கள் கொண்டு வந்தாலும், குற்றவாளிகளும்இதே தொழில்நுட்பங்களை, தங்கள் நடவடிக்கை பயன்படுத்திக் கொள்வது கவலையளிக்கிறது.
காவல் பணியாளர்களுக்கு தொழில் முறையிலான பயிற்சியளிக்க ரூ 37 கோடி மதிப்பீட்டில் போலீஸ் அகாடமி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதுஎன்றார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications