நெல்லையில் கடும் மழை: 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. மின்னல் தாக்கி நான்கு பேர்உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சிலபகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.

கூடங்குளம் அருகே உள்ள கே.சி.பழவூரில் இடி தாக்கியதில் தோட்டத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த சுந்தர்ராஜ் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள சீவலராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி.இவரது வயலில் மனைவி குருவம்மாள், மகள் மாடத்தி (23) ஆகியோர் வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் மாடத்தி அதே இடத்தில்இறந்தார். மற்ற இருவரும் காயமடைந்தனர்.

பணகுடி அருகே தண்டையார் குளத்தை சேர்ந்த கந்தையா தேவர் (50), நடராஜன்ஆகிய இருவரும் தோட்ட வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கிஇறந்தனர்.

இடி மின்னல் காரணமாக இம்மாவட்டத்தில் வடக்கன்குளம், ஆவரைகுளம் பகுதியில்வீடுகளில் உள்ள டெலிவிஷன்கள் சேதம் அடைந்துள்ளன. டெலிபோன்களும்இயங்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+